தமிழ்நாட்டில் முன்னிலை! திமுகவின் வாக்குகளை சூறையாடிய தவெக!
தமிழ்நாட்டில் முன்னிலை வகித்து வரும் நிலையில் திமுகவின் வாக்குகளை சூறையாடியிருக்கிறது தவெக.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தவெக யாருடைய வாக்குகளைப் பிரிக்கப்போகிறது என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக இருந்த நிலையில் அதற்கான பதில் கிட்டத்தட்ட கிடைத்துவிட்டது.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக, எதிர்க்கட்சியாக இருந்த அதிமுகவுக்கு மாற்றாக தவெகவும் இந்த தேர்தலில் களமிறங்கியது.
இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தவெக தொடக்கம் முதலே முன்னிலையில் உள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த தேர்தலில் திமுக 16 தொகுதிகளிலும் வெற்றி பெற்று கோட்டையாக இருந்த நிலையில், அனைத்து தொகுதிகளிலும் இந்த முறை தவெக முன்னிலையில் உள்ளது.
Advertisement
முன்னதாக, தவெக யாருடைய வாக்குகளைப் பிரிக்கப் போகிறாரோ அதன்படியே வெற்றி வாய்ப்பு அமையும் என்று கூறப்பட்ட நிலையில், தவெக முன்னிலை வகிக்கும் நிலையில், இரண்டாவது இடத்தில் திமுக இல்லாமல், மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டிருப்பது, திமுகவின் வாக்குகளை தவெக சூறையாடியிருக்கிறது என்றே தெரிகிறது.