ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இறக்கப்படும் படங்கள்!
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அமைச்சர் அறைகள சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திமுக தோல்வியடைந்து, தவெக வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அறைகள் சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மே 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மே 5ஆம் தேதி காலையிலேயே தலைமைச் செயலக ஊழியர்கள், அமைச்சர்களின் அறைகளை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்கள்.
அறைகளில் இருந்து அமைச்சர்களின் உடைமைகள் அனைத்தையும் பெட்டகத்தில் வைத்து அவர்களிடம் ஒப்படைக்கும் வகையில், அனைத்து ஊழியர்களும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.
Advertisement
ஒவ்வொரு திமுக அமைச்சரன் அறையிலும் மாட்டப்பட்டிருந்த தலைவர்களின் படங்களும் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இன்று காலை முதலே இது தொடர்பான புகைப்படங்களும் விடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகிவருகிறது.