விசிக, கம்யூனிஸ்ட் காலம் தாழ்த்துவது நல்லதல்ல: அமீர்
தவெக தலைமையில் ஆட்சி அமைப்பது காலத்தின் அவசியம் என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளது குறித்து...
தமிழக வெற்றிக் கழகத்துடனான கூட்டணி விவகாரத்தில் விசிகவும், கம்யூனிஸ்ட்டுகளும் காலம் தாழ்த்துவது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இயக்குநர் அமீர் தனது சமூக வலைதளப் பதிவில், ''விசிகவும், கம்யூனிஸ்ட்டுகளும் காலம் தாழ்த்துவது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல. தவெக தலைமையில் ஆட்சி அமைப்பது காலத்தின் அவசியம்'' என தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற தவெக, ஆட்சி அமைக்க ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து இன்று (மே 6) உரிமை கோரிய நிலையில், ஆதரவு எம்.எல்.ஏக்களின் முழுப் பட்டியல் கொடுக்க வேண்டும் என ஆளுநர் மாளிகை தரப்பில் கோரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.
Advertisement
நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் முதல்வர் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், விஜய் திட்டமிட்டபடி நாளை முதல்வராகப் பதவியேற்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 107 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்பதால் மற்ற கட்சிகளிடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் 5 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்கள் விஜய்க்கு ஆதரவு அளித்துள்ளதால், தவெகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 112 ஆக உயந்துள்ளது.
எனினும், பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தவெகவுக்கு இன்னும் 6 உறுப்பினர்கள் தேவைப்படுகிறது.