முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு: ஆளுநர் அறிவிப்பு!

தமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைக்கப்படுவதாக ஆளுநர் அறிவிப்பு.

தமிழக அரசு - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைக்கப்படுவதாக தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவை கலைக்கப்பட்டதற்கான அறிவிப்பை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வெளியிட்டுள்ளார்.

ஆளுநரின் உத்தரவு மே 5 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தோல்வி அடைத்ததையடுத்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது. இதில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

ஆளுங்கட்சியான திமுக கூட்டணி 73 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து மு.க. ஸ்டாலின் தனது முதல்வர் பதவி மற்றும் அமைச்சரவையின் ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் ஆர்.வி. ஆர்லேசுருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பி வைத்தார்.

மு.க. ஸ்டாலினின் ராஜிநாமா கடிதம் ஏற்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை தெரிவித்து இருந்தது.

summary

The Governor announces the dissolution of the 16th Tamil Nadu Legislative Assembly.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.