அடுத்த 3 மணி நேரத்துக்கு 20 மாவட்டங்களில் மழை!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு...
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
''ராமநாதபுரம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருச்சி, திண்டுக்கல், தேனி, கோவை, மதுரை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று காலை வெய்யில் வாட்டி வந்த நிலையில், சாரல் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
summary