சிவகாசியின் முதல் பெண் எம்எல்ஏ!
சிவகாசியின் முதல் பெண் எம்எல்ஏவாக தவெகவின் கீர்த்தனா குறித்து...
சிவகாசி தொகுதியின் முதல் பெண் எம்எல்ஏவாக தவெகவின் கீர்த்தனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி தொகுதியில் தவெகவின் கீர்த்தனா, காங்கிரஸின் அசோகன், அதிமுகவின் ராஜேந்திர பாலாஜி, நாதகவின் எஸ்தர் மேரி டயானாவும் போட்டியிட்டனர்.
இந்த நிலையில், 69 ஆண்டுகால சிவகாசி தொகுதி வரலாற்றில் முதல் பெண் எம்எல்ஏவாக தவெகவின் கீர்த்தனா, 11,670 வாக்கு வித்தியாசத்தில் 68,709 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.
Advertisement
இதனிடையே, தேர்தலில் வெற்றியடைந்த பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, கீர்த்தனா ஹிந்தியில் பேசியதாகவும், தமிழ்மொழியை பிரகடனப்படுத்தத் தவறியதாகவும் அவர் மீது பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஹிந்தியில் பேசியதற்கான விளக்கமளித்த கீர்த்தனா, என் கட்சியின் பிரதிநிதித்துவத்தை இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் பரப்ப விரும்புகிறேன். விஜய்யை பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.
நான் ஓர் உதாரணம் மட்டுமே; அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும். அனைவரும் அரசியலில் இணைய வேண்டும் என்பதே என் விருப்பம் என்று தெரிவித்தார்.
இவர், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரியில் கணிதத்தில் இளநிலைப் பட்டமும், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் புள்ளிவிவரத் துறையில் முதுநிலைப் பட்டமும் பெற்றுள்ளார்.