பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்!
பாபநாசம் அருகே அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது பற்றி...
பாபநாசம் அருகே அரசுப் பேருந்துகள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
திருச்சியிலிருந்து காரைக்கால் நோக்கி ஒரு அரசு பேருந்தும், சென்னையிலிருந்து தஞ்சாவூர் நோக்கி மற்றொரு அரசு பேருந்தும் சென்று கொண்டிருந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடை பகுதியில் சென்றபோது, இன்று காலை 5.30 மணியளவில் இரண்டு அரசு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும், சென்னையில் இருந்து தஞ்சை நோக்கி வந்த பேருந்து ஓட்டுநர் உள்பட இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த பயணிகளில் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
Advertisement
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு பாபநாசம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து படுகாயமடைந்த 3 பேர் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தகவலறிந்த பாபநாசம் காவல் நிலைய ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.