முகப்பு
தமிழ்நாடு

பொள்ளாச்சி அருகே கார் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 4 பேர் பலி

பொள்ளாச்சி அருகே கார் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது தொடர்பாக...

கார் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து. - படம்: டிஎன்எஸ்
பகிர்:

பொள்ளாச்சி அருகே கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலியாகினர்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனபால் என்பவர் குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

Advertisement

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த தனபால் மற்றும் அவரது மனைவி மேனகா, மகள் கனிஷ்கா மற்றும் உறவினர் சினேகா உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும், பலத்த காயங்களுடன் இருந்த சுஜித் என்ற 12 வயது சிறுவனை மீட்ட காவல் துறையினர், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த விபத்து குறித்து நெகமம் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

summary

Four people were killed in a headon collision between a car and a lorry near Pollachi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.