முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்

தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம் நடப்பதாக திமுக எம்.பி. வில்சன் பதிவு...

திமுக எம்.பி. வில்சன் - ANI
பகிர்:

தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம் நடப்பதாக திமுக எம்.பி. வில்சன் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தவெக 108 இடங்களைப் பெற்ற நிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் விசிகவின் ஆதரவை எதிர்நோக்கி இருக்கிறது.

இதனிடையேதான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி தொகுதி எம்எல்ஏ காமராஜ் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், எம்எல்ஏ காமராஜ் அளித்த கடிதம் போலியானது, தவெக குதிரை பேரம் செய்கிறது, அனைத்து கட்சிகளின் ஆதரவு கடிதங்களையும் ஆளுநர் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் டிடிவி தினகரன் கூறியிருந்தார். எம்எல்ஏ காமராஜும் தனது ஆதரவுக் கடித்தத்தை மறுத்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் திமுக எம்.பி. வில்சன் இதனைச் சுட்டிக்காட்டி தனது எக்ஸ் பக்கத்தில்,

"தமிழ்நாட்டில் மாற்றம் கொண்டு வருவோம் என அவர்கள்(தவெக) கூறியதற்கான உண்மையான அர்த்தம் இப்போதுதான் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

தமிழ்நாடு இத்தனை ஆண்டுகளில் இத்தகைய குதிரை பேரத்தைப் பார்க்கவில்லை.

பதவியேற்பதற்கு முன்னதாகவே இவ்வளவு நடக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

summary

Tamil Nadu hasnt seen horse trading attempts like this in many years: DMK MP wilson

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.