ஸ்டாலின் முட்டுக்கட்டை போடுகிறார்! திருமாவளவன் பேரம் பேசுகிறார்! தமிழிசை
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு பற்றி...
விஜய்யை ஆதரிப்பதுபோல பிம்பத்தை ஏற்படுத்திவிட்டு பின்புறத்தில் மு.க. ஸ்டாலின் முட்டுக்கட்டை போடுவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள விடியோ பதிவில்,
"எண்ணிக்கையுடன் வாருங்கள், ஆட்சியமைக்க அனுமதி தருகிறோம் என்று ஆளுநர் தெளிவாகக் கூறிவிட்டார். எனினும் எண்ணிக்கை இல்லாமலேயே ஆட்சியமைக்க கோருகிறார் விஜய். அது மக்களின் நம்பிக்கையைப் பெறுவதாக இருக்காது.
Advertisement
தனிப்பெரும் கட்சியை ஆட்சியமையக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்று கூறும் மு.க. ஸ்டாலின் பின்புறத்தில் தவெக ஆட்சியமைக்க முட்டுக்கட்டை போடுகிறார். விஜய்யை ஆதரிப்பதுபோல பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள். கம்யூனிஸ்டுகள் விஜய்க்கு ஆதரவு கூறிவிட்டு விஜய்க்கு பாஜக அழுத்தம் தருவதாகக் கூறுகின்றனர்.
கம்யூனிஸ்டுகளுடன் ஒட்டுமொத்தமாக முடிவெடுப்பதாகக் கூறிவிட்டு திருமாவளவன் இன்று ஏன் தயங்குகிறார், என்ன பேரம் பேசிக்கொண்டிருக்கிறார். காங்கிரஸ் திமுக கூட்டணியை முறித்துக்கொண்டுள்ளது.
அனைத்துக் கட்சிகளும் சுயலாபத்திற்காக முடிவு எடுத்துவிட்டு பாஜக மீது பழி போடுகின்றன. அது நியாயம் இல்லை. கட்சிகள் பாஜக மீதோ ஆளுநர் மீதோ பழி சொல்வது எந்த வகையிலும் சரியில்லை" என்று கூறியுள்ளார்.