முதல்வர் விஜய்யின் தனிச் செயலர்கள் நியமனம்
முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் தனிச் செயலாளர்களாக இருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் தனிச் செயலாளர்களாக இருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், சுகாதாரத் துறை செயலர் செந்தில்குமார் முதல்வர் விஜய்யின் கூடுதல் தலைமைச் செயலராகவும், ஆதிதிராவிடர் நலத்துறை செயலராக இருந்த லட்சுமிபிரியா முதல்வரின் தனிச் செயலராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இருவரும் பதவியேற்றதில் இருந்து ஓராண்டு பதவியில் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் 13-ஆவது முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றார். விஜய்க்கு முதல்வராக பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் செய்து வைத்தார்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டிகே பிரபு, கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். அவர்களுக்கும் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் ஆளுநர் செய்துவைத்தார்.
Two individuals have been appointed as the private secretaries to Chief Minister C. Joseph Vijay.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.