முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தை வளர்ச்சியின் உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்வார் விஜய்: ரேவந்த் ரெட்டி வாழ்த்து!

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தமிழக முதல்வர் விஜய்க்கு வாழ்த்து!

தமிழக முதல்வர் விஜய் - @CMOTamilnadu
பகிர்:

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார்.

தமிழகத்தின் 13-ஆவது முதல்வராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் இன்று(மே 10) காலை 10.15 மணியளவில் பதவியேற்றார். தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன்பின்னர், 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

தவெக தலைவர் விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்ற பின் அவருக்கு பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக, சிங்கப்பூர் தூதரக உயர் ஆணையர், முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

இந்நிலையில், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தமிழக முதல்வராகப் பதவியேற்றுள்ள விஜயை வாழ்த்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “தமிழக முதல்வராக நீங்கள் ராகுல் காந்தி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டதற்கு வாழ்த்துகிறேன். தமிழக முதல்வராக நீங்கள் ஏழைகளுக்கான நலத்திட்டங்கள், அனைவருக்கும் நீதியை நிலைநாட்டுவதுடன் உங்கள் மாநிலத்தை வளர்ச்சியில் உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்வீர்கள் என்று ஆணித்தரமாக நம்பிக்கை பூண்டிருக்கிறேன். நெஞ்சார்ந்த வாழ்த்துகள்” என்று பதிவிட்டிருக்கிறார்.

summary

Vijay Will Lead Tamil Nadu to the Pinnacle of Development: Revanth Reddy Extends Best Wishes!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments