எம்எல்ஏவாகப் பதவியேற்ற பிரேமலதா விஜயகாந்த்! எழுந்து நின்று வாழ்த்திய விஜய்!
பிரேமலதா விஜயகாந்த் எம்எல்ஏவாகப் பொறுப்பேற்றது பற்றி...
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முதல்முறையாக இன்று எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார்.
தமிழகத்தில் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று(மே 11) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவைக்குப் புதிதாகத் தேர்வான உறுப்பினர்கள் எம்எல்ஏக்களாகப் பதவியேற்று வருகின்றனர்.
இடைக்கால அவைத் தலைவர் சோழவந்தான் கருப்பையா உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.
Advertisement
Advertisement
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாகப் பதவியேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து அமைச்சர்களும் மற்ற உறுப்பினர்களும் பதவியேற்று வருகின்றனர்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முதல்முறையாக விருத்தாச்சலம் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்குத் தேர்வாகியுள்ளார்.
இதையடுத்து இன்று சட்டப்பேரவைக்கு வந்த அவர், சட்டப்பேரவை வாயிலைத் தொட்டு வணங்கிவிட்டு உள்ளே வந்தார்.
பின்னர் முதல்வர் ஜோசப் விஜய் முன்னிலையில் எம்எல்ஏவாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
எம்எல்ஏவாக பொறுப்பேற்ற பின் விஜய்க்கு வணக்கம் தெரிவித்தபோது விஜய் எழுந்து நின்று பிரேமலதாவுக்கு கையெடுத்துக் கும்பிட்டு வாழ்த்து தெரிவித்தார்.
Premalatha Vijayakanth Sworn In as MLA; Vijay Stands Up to Congratulate Her
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.