முதல்வர் விஜய்க்கு பழக்கூடை வழங்கி வாழ்த்திய சீமான்!
முதல்வர் விஜய்க்கு பழக்கூடை வழங்கி சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளது குறித்து...
முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு பழக்கூடை வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் பூக்களை கொடுத்து வாழ்த்திய நிலையில், சீமான் பெரிய பழக்கூடை கொடுத்துள்ளார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதல்வராக நேற்று (மே 10) பதவியேற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, இன்று (மே 11) அரசியல் மூத்த தலைவர்களை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Advertisement
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் இல்லத்திற்குச் சென்று வாழ்த்து பெற்றார். இதனைத் தொடர்ந்து அண்னா நகரில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இல்லத்திற்குச் சென்று வாழ்த்து பெற்றார்.
பின்னர் சென்னை நீலாங்கரையில் உள்ள பாமக தலைவர் அன்புமணி இல்லத்திற்குச் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனைத் தொடர்ந்து சீமான் இல்லத்திற்கு முதல்வர் விஜய் நேரில் சென்றார்.
அப்போது வீட்டு வாசலுக்கே வந்து விஜய்யை சீமான் வரவேற்று அழைத்துச் சென்றார். பின்னர் அவருக்கு பொன்னாடை போர்த்தி பழக்கூடையை பரிசாக அளித்தார். மற்ற தலைவர்கள் பூக்கூடை அளித்து வாழ்த்திய நிலையில், சீமான் பழக்கூடை அளித்துள்ள விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.