ஜெயலலிதா புகைப்படத்துடன் எம்எல்ஏவாகப் பொறுப்பேற்ற செங்கோட்டையன்!
ஜெயலலிதா புகைப்படத்துடன் செங்கோட்டையன் எம்எல்ஏவாக பொறுப்பேற்றுக் கொண்டது பற்றி...
தவெக அமைச்சர் செங்கோட்டையன் தனது சட்டைப்பையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகைப்படத்துடன் எம்எல்ஏவாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழகத்தில் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று(மே 11) காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தமிழக சட்டப்பேரவைக்குப் புதிதாகத் தேர்வான உறுப்பினர்கள் எம்எல்ஏக்களாகப் பதவியேற்று வருகின்றனர்.
இடைக்கால அவைத் தலைவர் சோழவந்தான் கருப்பையா உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.
Advertisement
முதலில் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாகப் பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்களும் மற்ற உறுப்பினர்களும் பதவியேற்று வருகின்றனர்.
அதிமுகவில் இருந்து பிரிந்து விஜய்யின் தவெகவில் இணைந்த செங்கோட்டையன் தனது கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் இம்முறை தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தவெக அமைச்சரவையிலும் இடமபெற்றுள்ளார்.
இதையடுத்து இன்று முதல்வர் விஜய் முன்னிலையில் எம்எல்ஏவாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். செங்கோட்டையன் தனது சட்டைப்பையில் ஜெயலலிதா புகைப்படத்துடன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தவெகவில் இணைந்த பிறகும் செங்கோட்டையன் தனது சட்டைப்பையில் ஜெயலலிதா புகைப்படத்தையே வைத்திருக்கிறார். இதற்கு விஜய்யும் அனுமதி வழங்கியதாகவும் வேறெந்த தலைவரும் இவ்வாறு அனுமதி வாங்கமாட்டார்கள் என்றும் செங்கோட்டையன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தனது சட்டைப்பையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் புகைப்படத்தை வைத்திருந்தார்.