தவெக அரசு பொறுப்பேற்ற 20 நாள்களில் சட்டம்-ஒழுங்கில் என்ன பிரச்னை வந்தது? செங்கோட்டையன்
மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கில் ஒரு பிரச்னையும் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
மாநிலத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற 20 நாள்களில் சட்டம்-ஒழுங்கில் பிரச்னை ஏதுமில்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களுடன் வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது, "கேள்வி கேட்பது மட்டுமின்றி, எங்கே தவறு நடக்கிறதோ அதனைச் சுட்டிக்காட்டினால், உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஏதுவாக இருக்கும்.
மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கில் ஒரு பிரச்னையும் இல்லை. பொறுப்பேற்ற 20 நாள்களில் என்ன பிரச்னை வந்தது? உங்கள் வீட்டில் என்ன கஷ்டம்?
Advertisement
Advertisement
இந்த அரசு, 6 மாத காலத்துக்குத் தன்னிச்சையாகச் செயல்பட வேண்டும், அதற்குப் பிறகுதான் கேள்வி கேட்போம் என்று எதிர்க்கட்சிகள் சொன்னார்கள்.
பொறுப்பேற்ற 20 நாள்களில் சட்டம் - ஒழுங்கில் கடும் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இந்தப் பகுதியில் நடந்த குற்றத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றத்தில் சம்பந்தப்பட்டவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, 24 மணிநேரத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டுமெனில், அதற்கான பாதுகாப்பு அரணை உருவாக்க வேண்டும். அதற்கானவற்றை முதல்வர் படிப்படியாக செய்து வருகிறார். அதற்கு குறிப்பட்ட கால அவகாசம் வேண்டும்" என்று தெரிவித்தார்.