தமிழ்நாட்டில் அதிகபட்ச மழைப்பொழிவு எங்கே?
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தஞ்சையில் உள்ள அதிராம்பட்டினத்தில் 71 மி.மீ., மழை பெய்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தஞ்சையில் உள்ள அதிராம்பட்டினத்தில் 71 மி.மீ., மழை பெய்துள்ளது.
வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்காக பரவலாக மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. அக்னி நட்சத்திரம் நடைபெற்று வரும் நிலையில், வெயிலால் கடும் சிரமத்திற்குள்ளாகும் மக்களுக்கு இந்த மழை பெரும் ஆறுதல் அளிக்கிறது.
அந்த வகையில், கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தஞ்சையில் உள்ள அதிராம்பட்டினத்தில் 71 மி.மீ., மழை பெய்துள்ளது.
Advertisement
கடந்த 24 மணிநேரத்தில் இன்று(மே 11) 5.30 வரை பெய்த மழையளவு மில்லிமீட்டரில் பின்வருமாறு:
அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 71.0
பாம்பன் (ராமநாதபுரம்) 7.0
சேலம் (சேலம்) 1.0
தூத்துக்குடி (தூத்துக்குடி) 0.5
மீனம்பாக்கம் (சென்னை) 0.4
கன்னியாகுமரி (கன்னியாகுமரி) 0.2
துவாக்குடி_இஸ்ரோ (திருச்சிராப்பள்ளி) - 25.0
நெய்யூர் (கன்னியாகுமரி) - 18.5
ஓசூர் (கிருஷ்ணகிரி) - 0.5
எச்ஆர்எஸ் பேச்சிப்பாறை (பேச்சிப்பாறை) - 27.5
ராம்நாடு கேவிகே (ராமநாதபுரம்) - 1.0
தனுவாஸ் மாதவரம் (சென்னை) - 0.5
கமுதி (ராமநாதபுரம்) - 7.0
ராஜபாளையம் (விருதுநகர்) - 6.0
தரமணி (சென்னை) - 0.5
நாகர்கோயில் (கன்னியாகுமரி) - 0.5
தூத்துக்குடி ரயில் நிலையம் (தூத்துக்குடி) - 0.5
ஏலகிரி_மலை (திருப்பத்தூர்) - 0.5
இதனிடையே தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும்.
ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.