பேரவைத் தலைவராக ஜே.சி.டி. பிரபாகர், துணைத் தலைவராக ரவிசங்கர் தேர்வு!
சட்டப்பேரவைத் தலைவரானார் ஜே.சி.டி. பிரபாகர்.
சட்டப்பேரவைத் தலைவராக ஜே.சி.டி. பிரபாகர், துணைத் தலைவராக ரவிசங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சட்டப்பேரவைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுதற்காக தவெக சார்பில், ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகர் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். அதேபோல, பேரவைத் துணைத் தலைவர் பதவிக்கு துறையூர் தொகுதி தவெக எம்எல்ஏ எம். ரவிசங்கர் மனு தாக்கல் செய்தார்.
பேரவைத் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தலுக்கு தவெக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள ஜே.சி.டி. பிரபாகர், எம்.ரவிசங்கர் ஆகியோருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.
Advertisement
இந்த நிலையில், சட்டப்பேரவைத் தலைவராக ஜே.சி.டி. பிரபாகர், துணைத் தலைவராக ரவிசங்கர் இருவரும் போட்டியின்றி இன்று(மே 12) தேர்வு செய்யப்பட்டனர்.
மரபுப்படி அவை முன்னவர் செங்கோட்டையன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆகியோர் ஜே.சி.டி. பிரபாகரை அழைத்துச் சென்று சட்டப்பேரவைத் தலைவர் இருக்கையில் அமர வைத்தனர்.