உளவுத்துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமனம்!
தமிழகத்தில் உளவுத்துறை ஐ.ஜி. மாற்றப்பட்டுள்ளது பற்றி...
வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த அஸ்ரா கார்க், தமிழக காவல்துறையின் உளவுத்துறை ஐ.ஜி.யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக உளவுத் துறையின் ஐ.ஜி.யாக செந்தில் வேலன் இருந்த நிலையில், தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு உளவுத்துறை ஐ.ஜி.யாக அவினாஷ் குமார் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
தற்போது விஜய் தலைமையிலான தவெக அரசு பதவியேற்றது முதல் அரசு அதிகாரிகள் பலரும் மாற்றப்பட்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
அந்தவகையில், வடக்கு மண்டல ஐஜியாக இருந்த அஸ்ரா கார்க், உளவுத்துறை புதிய ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அஸ்ரா கார்க்
2004 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பணியில் இணைந்தார். வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியைத் தொடங்கி நெல்லை, மதுரை, தருமபுரி மாவட்ட எஸ்பியாக பணியாற்றி மக்களுக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டவர். பின்னர் சிபிஐ-யில் பணியாற்றிய அவர் மீண்டும் தமிழகத்திற்கு வந்து தென் மண்டல ஐ.ஜி., வடசென்னை சட்டம் - ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையர் ஆகிய பணிகளைத் தொடர்ந்து தென் மண்டல ஐ.ஜி.யாக இருந்தார்.
கரூர் நெரிசல் பலி சம்பவம் தொடர்பான வழக்கில், அதுபற்றி விசாரிக்க அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரியது தவெக.
இந்நிலையில் தவெக அரசு பதவியேற்ற நிலையில், அஸ்ரா கார்க் தமிழக உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Asra Garg Appointed as IG of Intelligence in tamilnadu
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.