உளவுத்துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமனம்!
தமிழகத்தில் உளவுத்துறை ஐ.ஜி. மாற்றப்பட்டுள்ளது பற்றி...
வடக்கு மண்டல ஐஜியாக இருந்த அஸ்ரா கார்க், உளவுத்துறை ஐ.ஜி.யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு உளவுத்துறை ஐ.ஜி.யாக அவினாஷ் குமார் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
தற்போது விஜய் தலைமையிலான தவெக அரசு பதவியேற்றது முதல் அரசு அதிகாரிகள் பலரும் மாற்றப்பட்டு வருகின்றனர்.
Advertisement
அந்தவகையில், வடக்கு மண்டல ஐஜியாக இருந்த அஸ்ரா கார்க், உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அஸ்ரா கார்க் 2004 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பணியில் இணைந்தார். வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உதவி கண்காணிப்பாளராக பணியைத் தொடங்கி நெல்லை, மதுரை, தருமபுரி மாவட்ட எஸ்பியாக பணியாற்றி மக்களுக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டவர். பின்னர் சிபிஐ-யில் பணியாற்றிய அவர் மீண்டும் தமிழகத்திற்கு வந்து பணியாற்றி வருகிறார்.