தவெகவுக்கு ஆதரவளித்த அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இபிஎஸ் மனு!
சி.வி. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பேரவை செயலாளரிடம் மனு.
தவெகவுக்கு ஆதரவளித்த அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, எடப்பாடி பழனிசாமி தரப்பு நிர்வாகிகள் சட்டப்பேரவை செயலாளரிடம் மனு அளித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில் மே 13 ஆம் தேதிக்குள் முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநா் ஆர்.வி. ஆர்லேகா் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில், இன்று(மே 13) காலை முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு முன்மொழியப்பட்டது.
Advertisement
சட்டப்பேரவை உறுப்பினர்களின் உரையைத் தொடர்ந்து கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டு பகுதிவாரியாக ஆறு பிரிவுகளில் அமர்ந்துள்ள எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் கணக்கெடுப்பட்டது.
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் பதிவாகின. நடுநிலை வகிப்பதாக 5 வாக்குகள் பதிவாகின.
இதில், சி.வி. சண்முகம் அணியிலான 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். தவெக அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்த எம்.எல்.ஏ.க்கள் 25 பேர் மீது நடவடிக்கை எடுக்க சட்டப்பேரவை செயலாளரிடம் இபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.
அதிமுக கொறடா உத்தரவை மீறி வாக்களித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.