ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை! மாலை நிலவரம்!
மாலை நிலவரப்படி தங்கம் விலை பற்றி..
சென்னையில் ஆபரணத் தங்கம் காலையில் ஜெட் வேகத்தில் உயர்ந்த நிலையில், மாலையில் குறைந்துள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாள்களாக தொடர்ந்து ஏற்ற - இறக்கத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில், வர்த்தகம் தொடங்கும்போது தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
அதன்படி, காலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 8,560 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,23,200-க்கும், கிராமுக்கு ரூ. 1,070 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 15,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
Advertisement
இந்தநிலையில், வர்த்தகம் நிறைவுபெறும்போது காலையில் அதிகரித்த தங்கத்தின் விலை, மாலையில் குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராமுக்கு ரூ. 400 குறைந்து ஒரு கிராம் ரூ. 15,000-க்கும், சவரனுக்கு ரூ. 3,200 குறைந்து ரூ. 1,20,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று காலை வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 30 உயர்ந்தும், கிலோவுக்கு ரூ. 30 ஆயிரமும் உயர்ந்தது.
திடீர் விலையுயர்வு ஏன்?
ஈரான் போர் உள்ளிட்ட சர்வதேச காரணங்களால் தங்கம் விலை அதிகரித்து வருகின்றது. இந்தியாவில பொருளாதார சிக்கல், ரூபாயின் மதிப்பு சரிவு ஆகிய காரணங்களால் ஓராண்டுக்கு மக்கள் தங்கம் வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தங்கம் - வெள்ளி பொருள்கள் மீதான சுங்கவரியை 6ல் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியுள்ள நிலையில், இந்த வரி உயர்வு இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது.