புதுவையிலும் தமிழுக்கு மூன்றாவது இடமா? முதல்வர் பதவியேற்பு விழாவில் மாற்றம்!
புதுவையில் முதல்வர் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டுள்ளது பற்றி...
தமிழகத்தைத் தொடர்ந்து புதுவையிலும் முதல்வர் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி 5 ஆவது முறையாக இன்று(மே13) முதல்வராகப் பதவியேற்றார்.
இந்நிலையில் தமிழகத்தைத் தொடர்ந்து புதுவையிலும் இன்றைய முதல்வர் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இன்று நடைபெற்ற விழாவில் முதலில் வந்தே மாதரம், இரண்டாவதாக தேசிய கீதம் பாடப்பட்டு பின்னர் மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுள்ளது.
ஆனால் பதவியேற்பு விழா நிகழ்ச்சி நிரலில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, அதன்பின்னர் வந்தே மாதரம், தேசிய கீதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் தவெக தலைவர் விஜய் முதல்வராகப் பதவியேற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
Tamil Thai Vazhthu to the third position during puducherry chief minister swearing-in ceremony
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.