புதுவையிலும் தமிழுக்கு மூன்றாவது இடமா? முதல்வர் பதவியேற்பு விழாவில் மாற்றம்!
புதுவையில் முதல்வர் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டுள்ளது பற்றி...
தமிழகத்தைத் தொடர்ந்து புதுவையிலும் முதல்வர் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி 5 ஆவது முறையாக முதல்வராக இன்று(மே13) பதவியேற்றார்.
தமிழகத்தைத் தொடர்ந்து புதுவையிலும் இன்றைய முதல்வர் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டுள்ளது.
Advertisement
இன்று நடைபெற்ற விழாவில் முதலில் வந்தே மாதரம், இரண்டாவதாக தேசிய கீதம் பாடப்பட்டு பின்னர் மூன்றாவதாக தமிழ்த்தாய் பாடப்பட்டுள்ளது.
ஆனால் பதவியேற்பு விழா நிகழ்ச்சி நிரலில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, அதன்பின்னர் வந்தே மாதரம், தேசிய கீதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் தவெக தலைவர் விஜய் முதல்வராகப் பதவியேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.