தமிழ்த் தாய் வாழ்த்துக்கு இன்றும் கடைசி இடம்!
தமிழ்த் தாய் வாழ்த்து இன்றும் மூன்றாவதாக இசைக்கப்பட்டது பற்றி...
தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமையும் தமிழ்த் தாய் வாழ்த்து மூன்றாவதாக இசைக்கப்பட்டுள்ளது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த மே 10 ஆம் தேதி முதல்வர் சி. ஜோசப் விஜய் பதவியேற்ற போது, தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் மூன்றாவதாக இசைக்கப்பட்டது சர்ச்சையானது.
வழக்கமாக, தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து ஒலிக்கப்படும். நிகழ்ச்சி இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படுவது மரபாக இருந்து வருகிறது.
Advertisement
Advertisement
ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்து கடைசியாக இசைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கூட்டணிக் கட்சித் தலைவர் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, இனிவரும் காலங்களில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் முதலில் இசைக்கப்படும், இறுதியாக தேசிய கீதம் இசைக்கப்படும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதி அளித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சியில் வந்தே மாதரம், தேசிய கீதம் ஆகியவற்றை தொடர்ந்து மூன்றாவதாக தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.
இதுதொடர்பாக ஆளுநரிடம் கோரிக்கை வைத்தும் அவர் மறுத்துவிட்டதாக முதல்வர் விஜய் தெரிவித்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பெ. சண்முகம் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சியிலும் தமிழ்த் தாய் வாழ்த்து மூன்றாவதாகவே இசைக்கப்பட்டுள்ளது.