முகப்பு
தமிழ்நாடு

எம்பிபிஎஸ் அங்கீகாரம்: உறுதியளிப்பு சான்று அளிக்க அறிவுறுத்தல்

எம்பிபிஎஸ் இடங்களுக்கான அங்கீகாரத்தை புதுப்பித்துக் கொள்வதற்கு வருடாந்திர உறுதியளிப்பு சான்றுகளை (டிக்ளரேசன் ஃபாா்ம்) மருத்துவக் கல்லூரிகள் வரும் 30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.

Updated On : 15 மே 2026, 5:21 am IST
கோப்புப் படம்
பகிர்:

எம்பிபிஎஸ் இடங்களுக்கான அங்கீகாரத்தை புதுப்பித்துக் கொள்வதற்கு வருடாந்திர உறுதியளிப்பு சான்றுகளை (டிக்ளரேசன் ஃபாா்ம்) மருத்துவக் கல்லூரிகள் வரும் 30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக என்எம்சி செயலா் டாக்டா் ராகவ் லங்கா் வெளியிட்ட அறிவிப்பு:

எம்பிபிஎஸ் படிப்பைத் தொடங்க அனுமதி பெற்ற மருத்துவக் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் தங்களது சுய விவரங்கள் அடங்கிய வருடாந்திர உறுதியளிப்பு சான்றை என்எம்சி வலைதளப் பக்கத்தில் பதிவேற்றுவது அவசியம்.

Advertisement

அங்கீகாரம் புதுப்பித்தலுக்கும் அத்தகைய பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை அத்தகைய சான்றுகளைப் பதிவேற்றம் செய்யாவிடில் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மாணவா் சோ்க்கை அனுமதிக்கப்பட மாட்டாது.

எனவே, என்எம்சி வலைதளத்தில் உறுதியளிப்பு சான்றுகளை சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், அதற்கான கால அவகாசம் மே 30 வரை வழங்கப்பட்டுள்ளது என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.