முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இன்றைய வானிலை நிலவரம் பற்றி...

கோப்புப் படம் - ENS
பகிர்:

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இதுபற்றி வெளியிட்டுள்ள தகவலில்,

"தமிழகத்தின் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.

Advertisement

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

TN rain update for next 3 hours

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.