முகப்பு
தமிழ்நாடு

முதல்வர் விஜய் வரும் முன் சோஃபா வந்தது ஏன்? - திருமாவளவன் விளக்கம்

விசிக அலுவலகத்திற்கு சோஃபா வந்தது குறித்து திருமாவளவன் விளக்கம்...

விசிக அலுவலகத்திற்கு வந்த சோஃபா | முதல்வர் விஜய்யுடன் திருமாவளவன். - கோப்புப் படம்
பகிர்:

முதல்வர் விஜய் சந்திப்புக்கு முன் விசிக அலுவலகத்திற்கு வந்த சோஃபா ஏற்கெனவே ஆர்டர் செய்யப்பட்டது என கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய திருமாவளவன்,

"என்னை முதல்வராக்க முயற்சி நடந்தது குறித்து எனக்குத் தெரியாது. நண்பர்கள் மூலமாக மட்டுமே எனக்குத் தகவல் வந்தது.

Advertisement

முதல்வர் பதவிக்காகவே தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்க நான் தாமதம் செய்ததாக பலரும் அவதூறு பரப்புகிறார்கள். முதல்வர் பதவிக்காக நான் காத்திருக்கவில்லை.

முதல்வர் விஜய் சந்திப்புக்கு முன், விசிக அலுவலகத்திற்கு வந்த சோஃபா ஏற்கெனவே ஆர்டர் செய்யப்பட்டது" என்று கூறினார்.

முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தரப்பு எம்எல்ஏக்களை விஜய் சந்திப்பதற்கு முன்னதாக, சி.வி சண்முகம் அலுவலகத்திற்கும் ஒரு சோஃபா வந்தது.

ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளுக்கு தவெக சார்பில் ஒரு சோஃபா அனுப்பப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் குற்றச்சாட்டுமுன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

Why Did Sofa Arrive Before Chief Minister Vijay: Thirumavalavan Explains

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.