இபிஎஸ் நடவடிக்கை: எம்எல்ஏக்களுடன் சி.வி. சண்முகம் தரப்பு ஆலோசனை!
ஆதரவு எம்எல்ஏக்களுடன் சி.வி. சண்முகம் தரப்பு ஆலோசனை...
அதிமுக எம்எல்ஏக்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், சி.வி. சண்முகம் தரப்பினர் அதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுகவில் இபிஎஸ் அணி, சி.வி. சண்முகம் தரப்பு அணி என இரண்டாகப் பிரிந்துள்ள நிலையில் இரு தரப்புக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது.
சி.வி. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்து தற்போதைய அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதேபோல, தவெகவுக்கு எதிராக வாக்களித்ததால் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி உள்பட 22 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென சட்டப்பேரவைத் தலைவரிடம் சி.வி. சண்முகம் தரப்பு மனு அளித்துள்ளது.
Advertisement
இதையடுத்து சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேல்மணி, சி. விஜயபாஸ்கர் மற்றும் ஆதரவு எம்எல்ஏக்கள் இணைந்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள சி.வி. சண்முகம் அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், சட்ட நடவடிக்கையை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொள்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.