புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! முதல்வர் விஜய்யிடம் முக்கிய துறைகள்!
புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு பற்றி...
முதல்வர் விஜய் தலைமையிலான அரசில் பொறுப்பேற்ற 9 அமைச்சர்களுக்கு இன்று(மே 16) துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு கடந்த மே 10 ஆம் தேதி பதவியேற்றது. முதல்வர் விஜய்யுடன் 9 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். பதவியேற்று 6 நாள்களாகியும் துறைகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து இன்று அமைச்சர்களுக்கான துறைகள் பட்டியல் மற்றும் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக ஆளுநர் ஆர்லேகரை முதல்வரின் தனிச் செயலர் செந்தில் குமார் சந்தித்திருந்தார்.
Advertisement
Advertisement
இதையடுத்து முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
முதல்வர் சி. ஜோசப் விஜய் - காவல், உள்துறை, பொது நிர்வாகம், மகளிர் மேம்பாடு, இளைஞர் நலன், குழந்தைகள் நலன், முதியோர் நலன், மாற்றுத்திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் விநியோகம்
என். ஆனந்த் - ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை - ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து ஒன்றியம், பாசனத் திட்டங்கள்.
ஆதவ் அர்ஜுனா - பொதுப்பணித் துறை (கட்டடங்கள், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள்), விளையாட்டு மேம்பாட்டுத் துறை.
கே.ஜி. அருண்ராஜ் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை (மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன்)
கே.ஏ. செங்கோட்டையன் - நிதித் துறை (நிதி, ஓய்வூதியங்கள்)
பி. வெங்கடரமணன் - உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை.
ஆர். நிர்மல்குமார் - மின்சாரம் மற்றும் சட்டத் துறை
ராஜ்மோகன் - பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மக்கள் தொடர்புத் துறை
டி.கே. பிரபு - கனிம வளங்கள் மற்றும் சுரங்கங்கள் துறை.
எஸ். கீர்த்தனா - தொழில் துறை (தொழிற்சாலைகள், முதலீடு ஊக்குவிப்பு) என அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Ministries alloted to new ministers in TVK govt
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.