இன்று தொடங்குகிறது தென்மேற்குப் பருவமழை!
தென்மேற்குப் பருவமழை இன்று தொடங்குவது பற்றி..
தமிழநாட்டில தென்மேற்குப் பருவமழை இன்று தொடங்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெப்பம் கொளுத்திவந்த நிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இந்தாண்டு தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
அதன்படி, தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதிகளில் அடுத்த சில மணி நேரத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கான சாத்தியகூறுகள் நிலவி வருகின்றன.
Advertisement
இந்தாண்டு தமிழ்நாட்டில் வழக்கத்தைவிட 6 நாள்களுக்கு முன்பாகவே தென்மேற்குப் பருவமழை தொடங்கவுள்ளது.
இன்று (மே 16) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் லேசான மழை பெய்யக்கூடும்.
விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தேனி மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.