முகப்பு
தமிழ்நாடு

ரூ. 200 லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறித்து...

காவல் உதவி ஆய்வாளர் மோகன். - படம்: தினமணி
பகிர்:

திருப்பூர்: ஆடு விற்பனைக்கு கொண்டு சென்ற வாகனத்தை மறித்து ரூ. 200 லஞ்சம் பெற்ற காவல் உதவி ஆய்வாளர் மோகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஆடு விற்பனைக்கு கொண்டு சென்ற விவசாயியை காங்கேயம் சாலை புதுப்பாளையம் பகுதியில் வாகன சோதனைக்கு நிறுத்திய திருப்பூர் மாநகர் நல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன் என்பவர், வாகனத்தின் ஆவணங்களை சரிபார்த்தபோது, முறையான சான்றிதழ் இல்லை என்று கூறி ரூ. 200 லஞ்சம் பெற்றுள்ளார்.

இதனை ஆடு வியாபாரிகள் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், காவல் உதவி ஆய்வாளர் மோகனை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் கைதிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, அவர்களுக்குத் தேவையானவற்றை செய்து கொடுத்ததாக ஆயுதப்படை ஆய்வாளர் மாரிமுத்து, உதவி ஆய்வாளர்கள் திருமுருகன், செல்லத்துரை ஆகிய 3 பேர் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

summary

Sub-Inspector Mohan was suspended for intercepting a vehicle transporting goats for sale and accepting a bribe of ₹200.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.