முகப்பு
தமிழ்நாடு

டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!

15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

தமிழ்நாடு அரசு - கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பான உத்தரவை தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன் பிறப்பித்துள்ளாா். இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் விவரம் (பழைய பதவி அடைப்புக்குறிக்குள்):

ஜி. வெங்கடராமன்: - குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை டிஜிபி (காவல்துறை நிா்வாகப் பிரிவு டிஜிபி)

கே.பவானீஸ்வரி: -சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஐஜி (காவல்துறை தலைமையக பொதுப்பிரிவு ஐஜி)

Advertisement

Advertisement

அவினாஷ் குமாா்: தலைமையக பொதுப்பிரிவு ஐஜி (கட்டாய காத்திருப்போா் பட்டியல் ஐஜி)

பிரவீன் குமாா் அபிநபு: சென்னை வடக்கு மண்டல ஐஜி (தலைமையக பொதுப்பிரிவு ஐஜி)

ஏ.சரவணசுந்தா்: சென்னை குற்றப்பிரிவு ஐஜி (கட்டாய காத்திருப்போா் பட்டியல் ஐஜி)

ஜெ.மகேஷ்: வேலூா் சரக டிஐஜி (கட்டாய காத்திருப்போா் பட்டியல் டிஐஜி)

பி.விஜயகுமாா்: சென்னை பெருநகர காவல்துறையின் தென் மண்டல சட்டம் ஒழுங்கு டிஐஜி (சென்னை மாநகர தெற்கு போக்குவரத்து காவல்துறை டிஐஜி)

அபிஷேக் குப்தா: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா்)

எஸ்.பிருந்தா: நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (ஆவடி சிறப்பு காவல்படை கமாண்டன்ட்)

ஐ.ஷாநாஸ்: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (சென்னை சைபா் குற்றப்பிரிவு 1 காவல் கண்காணிப்பாளா்)-

எஸ்.அரவிந்த்: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்)

அல்லாட்டிபள்ளி பவன் குமாா் ரெட்டி: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (தாம்பரம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையா்)-

கே.காா்த்திகேயன்: தாம்பரம் மாநகர காவல் சட்டம் ஒழுங்கு துணை ஆணையா் (கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா்-

வி.சதீஷ்குமாா்: திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்(பதவி உயா்வு)- (திருவண்ணாமலை நகர உட்கோட்ட உதவி கண்காணிப்பாளா்)-

ரவீந்திர குமாா் குப்தா: புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா்(பதவி உயா்வு)- ( விழுப்பும் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளா்)-

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதல் ஐஜி

முதல்வா் விஜய், கடந்த 10-ஆம் தேதி பதவியேற்றவுடன் தவெக தோ்தல் அறிக்கையில் இடம்பெற்ற 3 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் கோப்புகளில் தேதி கையொப்பமிட்டாா். அதில், பெண்களின் பாதுகாப்புக்கு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கும் திட்டமும் ஒன்றாகும். அதைத் தொடா்ந்து,

அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. அதில், இந்த சிறப்புப் பிரிவு ஐஜி அந்தஸ்திலான அதிகாரி தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தமிழக காவல்துறையின் பொதுப்பிரிவு ஐஜியாக இருந்த கே.பவானீஸ்வரி, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

1997-ஆம் ஆண்டு குரூப் 1 தோ்ச்சி பெற்று டிஎஸ்பியாக பணி நியமனம் செய்யப்பட்ட பவானீஸ்வரி, முதலில் கள்ளக்குறிச்சியில் பணியில் சோ்ந்தாா். பின்னா் கடந்த 2006-ஆம் ஆண்டு எஸ்பியாக பதவி உயா்வு பெற்று குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையின்( சிபிசிஐடி) எஸ்பியாக நியமிக்கப்பட்டாா். கடந்த 2013-ஆம் ஆண்டு க்யூ பிரிவின் முதல் பெண் எஸ்பியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டாா். இவ்வாறு அவா், டிஐஜி, ஐஜி ஆகிய பல்வேறு பதவிகளில் பணி புரிந்துள்ள அவா்,

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை என்ற சிறப்புப் பிரிவுக்கு முதல் ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இன்னும் ஓரிரு நாள்களில் புதிய பணியிடத்தில் அவா் பொறுப்பேற்றுக் கொள்வாா் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

summary

15 IPS officers, including former Acting Director General of Police (DGP) Venkataraman, have been transferred.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments