டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!
15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...
முன்னாள் பொறுப்பு காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று(மே 20) 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
Advertisement
Advertisement
* காவல்துறை தலைமை இயக்குநர் (நிர்வாகம்) வெங்கடராமன், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* சிங்கப்பெண் சிறப்புப் பிரிவு ஐ.ஜி.யாக கே. பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.
* காத்திருப்போர் பட்டியலில் இருந்த அவினாஷ் குமார், தலைமையக பொதுப்பிரிவு ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* தலைமையக பொதுப்பிரிவு ஐ.ஜி.யாக இருந்த பிரவீன் குமார் அபிநபு, சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
* கோவை எஸ்.பி.ஆக இருந்த கே. கார்த்திகேயன், தாம்பரம் மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* தாம்பரம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக இருந்த அல்லாட்டி பவன் குமார் ரெட்டி, கோவை எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
* காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஏ. சரவணசுந்தர், சென்னை குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.