அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு!
அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு பற்றி...
தவெக தலைமையிலான அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு இணைய வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. முதல்கட்டமாக முதல்வர் ஜோசப் சி. விஜய்யுடன் 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்ட நிலையில், இந்த வாரத்துக்குள் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், அயோத்திதாச பண்டிதரின் பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் விஜய் இன்று மரியாதை செலுத்தினார்.
Advertisement
Advertisement
இந்த நிகழ்வு முடிந்தவுடன் செய்தியாளர்களை சந்தித்து ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:
”அமைச்சரவை விரிவாக்கம் விரைவில் அறிவிக்கப்படும். சமூக நீதி கொள்கையுடைய அனைத்துக் கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும். காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெறுகிறது.
வெளியில் இருந்து ஆதரவு என்ற இடதுசாரிகளின் கொள்கையை நாங்கள் மதிக்கிறோம். விசிக மற்றும் ஐயூஎம்எல் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும்.
பின்வாசல் வழியாக ஆட்சிக்கு வர இபிஎஸ் முயற்சித்தார். மக்கள் தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி செயல்பட முயற்சித்ததால் அதிமுகவின் ஒரு பகுதியினர் எங்களுக்கு ஆதரவு கொடுத்தனர்.
திமுகவுடன் இணைந்தது வரலாற்றுப் பிழை, தற்கொலைக்கு சமம் என்று அவர்கள் கருதுகிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை நாங்கள் தோழமையுடன்தான் பார்க்கிறோம்.
இபிஎஸ், மு.க. ஸ்டாலின், உதயநிதி இணைந்து குதிரை பேர அரசியலை தொடங்கினார்கள். தனது கொள்கையை மறந்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க திமுக முயற்சித்தது” எனத் தெரிவித்துள்ளார்.