முகப்பு
தமிழ்நாடு

அரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்

அரசு விவகாரங்களில் மக்கள் பிரதிநிதிகள் அல்லாதோர் தலையிடக் கூடாது என தவெகவினருக்கு கட்சி பொதுச் செயலர் என். ஆனந்த் அறிவுறுத்தல்

என். ஆனந்த் - கோப்புப் படம்
பகிர்:

அரசு விவகாரங்களில் மக்கள் பிரதிநிதிகள் அல்லாதோர் தலையிடக் கூடாது என தவெகவினருக்கு கட்சி பொதுச் செயலர் என். ஆனந்த் அறிவுறுத்தல்

தவெகவினருக்கு அறிவுரை வழங்கி, கட்சியின் பொதுச்செயலரும் அமைச்சருமான என். ஆனந்த் கூறியிருப்பதாவது, "அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடுதல் கூடாது. தங்களின் எல்லை என்ன என்பதை அறிந்து தவெகவினர் செயல்பட வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகள் அல்லாதோர், அரசு சார்ந்த விவகாரங்கள் தலையிடுதலோ ஆய்வுகள் மேற்கொள்ளுதலோ கூடாது.

Advertisement

Advertisement

முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாதவகையில் நடந்து கொள்வது நம் கடமை. முதல்வர் விஜய் தலைமையில் ஆட்சியமைந்துள்ள நிலையில், நமக்கான பொறுப்பு இன்னும் பல மடங்கு அதிகரித்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

தென்காசி, தாம்பரம் அரசு மருத்துவமனைகளில் தவெகவினர் ஆய்வு செய்த சம்பவம் சர்ச்சையாகிய நிலையில், கட்சியினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.

summary

Do Not Interfere in Government Affairs: N. Anand Instructs TVK Cadres

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.