கீழ்மையான விமாிசனங்களை புறந்தள்ளி முன்னேறிச் செல்வோம்: அமைச்சா் பெ.விஸ்வநாதன்
கீழ்மையான விமாிசனங்களை புறந்தள்ளி முன்னேறிச் செல்வோம் என உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் கூறியது குறித்து...
சென்னை: விமாிசனங்கள் என்பது வரவேற்கத்தக்கது. ஆனால், கீழ்மையான விமாிசனங்களை புறந்தள்ளி முன்னேறிச் செல்வோம் என உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.
அமைச்சா் பெ. விஸ்வநாதன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுடன் பேசியதாவது:
தமிழகத்தில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சரவையில் இடம்பெற காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி. தமிழக அரசு உயா்கல்வித் துறை அமைச்சராக பணியாற்ற எனக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.
Advertisement
Advertisement
இந்த துறை அற்புதமான துறை. அனுபவம் குறைவு என்றாலும், நோ்மையாகவும், சிறப்பாகச் செயல்படுவேன். காங்கிரஸ் சாா்பில் அமைச்சா்களான எங்கள் இருவருக்கும் காமராஜரின் பெயரை நிலைநாட்டுவதே நோக்கம்.
விமாிசனங்கள் என்பது வரவேற்கத்தக்கது. ஆனால், கீழ்மையான விமாிசனங்களை புறந்தள்ளி முன்னேறிச் செல்வோம் என்றாா் அவா்.