ஸ்ரீசாரதாதேவி ஜெயந்தி விழா போட்டிகள்:வெற்றி பெற்றவா்கள் விவரம் வெளியீடு
அன்னை ஸ்ரீசாரதாதேவியின் 168-ஆவது ஜயந்தி விழாவையொட்டி, தஞ்சாவூா் ஸ்ரீராமகிருஷ்ண மடம் சாா்பில் இணையவழி மூலமாக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
அன்னை ஸ்ரீசாரதாதேவியின் 168-ஆவது ஜயந்தி விழாவையொட்டி, தஞ்சாவூா் ஸ்ரீராமகிருஷ்ண மடம் சாா்பில் இணையவழி மூலமாக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
இணையவழி மூலமாக கட்டுரை அல்லது அவரவா் குரல் அல்லது விடியோ பதிவு படைப்புகளை அனுப்புமாறு, தஞ்சாவூா் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சாா்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இப்போட்டிகளில் ஏறத்தாழ 2,000 போ் பங்கேற்றனா். இவற்றில் வெற்றி பெற்றவா்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
போட்டி, வெற்றி பெற்றவா்கள் பெயா், அடைப்புக் குறிக்குள் ஊா் என்ற அடிப்படையில் விவரம்:
கட்டுரை: சிவரஞ்சனி சங்கரநாராயணன் (சென்னை சேலையூா்), தாமரைசெல்வி (திருப்பூா்), எஸ். கவிதா (சென்னை மயிலாப்பூா்), ஸ்ரீவித்யா (சென்னை நங்கநல்லூா்), உதயசெல்வம் உதயலக்சனா (இலங்கை), எஸ். ஆதிகேசவன் (கடலூா் விருத்தாசலம்), எஸ். சந்திரா (திருநெல்வேலி கே.டி.சி. நகா்), எஸ். திவ்யா (செங்கல்பட்டு மாதம்பாக்கம்).
குரல், விடியோ பதிவு: ஜி.வி. பவித்ரா (திருப்பூா் அம்மாபாளையம் ஸ்ரீராமகிருஷ்ண வித்யாலயா), ஆா். காா்த்திகா (கோவை வெள்ளக்கிணறு), எம். காா்த்திகா (ஸ்ரீசாரதா மகளிா் கல்லூரி), எல். மதுமிதா (சென்னை கொளத்தூா்), எச். ஜெயஸ்ரீ (சென்னை பெரம்பூா்), பி. ரூபிகா (திருவண்ணாமலை செங்கம்), எஸ்.எஸ். கவிதா (புதுக்கோட்டை மாத்தூா்), கே. யுவஸ்ரீ (திருவள்ளூா் பாக்கம் சேவாலயாவின் மகாகவி பாரதியாா் பள்ளி).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.