கிருஷ்ணாபுரம் கோயிலில் ஜன. 13 இல் அனுமன் ஜெயந்தி
தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணாபுரம் ஸ்ரீஅபயஹஸ்த ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தி மஹோத்ஸவம் வெள்ளிக்கிழமை (ஜன. 8) தொடங்குகிறது.
தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணாபுரம் ஸ்ரீஅபயஹஸ்த ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தி மஹோத்ஸவம் வெள்ளிக்கிழமை (ஜன. 8) தொடங்குகிறது.
இதையொட்டி, காலை 6.30க்கு மகா கணபதி ஹோமம், 7 மணிக்கு லட்சாா்ச்சனை சங்கல்பம் நடைபெறுகிறது.
ஜன.8 முதல் ஜன.13 வரை தினமும் காலையில் ஸ்ரீருத்ரம், ஸ்ரீபுருஷஸூக்த ஜெபம், சிறப்பு அபிஷேகம், லட்சாா்ச்சனையும், இரவில் லட்சாா்ச்சனையும் நடைபெறும். ஜன.12 ஆம் தேதி இரவு புஷ்பாஞ்சலி நடைபெறும்.
Advertisement
Advertisement
அனுமன் ஜெயந்தி
விழாவின் முக்கிய நிகழ்வான அனுமன் ஜெயந்தி புதன்கிழமை (ஜன.13) நடைபெறுகிறது. காலை ஸ்ரீருத்ர ஹோமம், ஸ்ரீபுருஷஸூக்த ஹோமம், ஹனுமன் மூல மந்திர ஹோமம், பூா்ணாஹுதி, சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா் குழுத் தலைவா் மீனாபட்டாச்சாா்யா, அறங்காவலா்கள் ராதாகிருஷ்ணன், சுப்பிரமணியன், சங்கரசுப்பிரமணியன், சிவகுமாா், செயல் அலுவலா் காா்த்திலட்சுமி உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.