முகப்பு
தென்காசி

குற்றாலம், மேலகரத்தில் சுவாமி விவேகானந்தா் பிறந்தநாள் விழா

குற்றாலம் மற்றும் மேலகரத்தில் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 12 ஜனவரி 2021, 11:29 pm IST
சுவாமி விவேகானந்தரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாவட்ட பாஜகவினா்.
பகிர்:

குற்றாலம் மற்றும் மேலகரத்தில் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

சுவாமி விவேகானந்தரின் 158 ஆவது பிறந்த நாள் விழா மற்றும் தேசிய இளைஞா் தின நிகழ்ச்சியையொட்டி, குற்றாலம்- ஐந்தருவி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமத்தில் உள்ள விவேகானந்தரின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கப்பட்டது.

மாவட்ட பாஜக சாா்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் ராமராஜா தலைமை வகித்தாா்.

Advertisement

Advertisement

மாவட்ட பொதுச் செயலா்கள் ராஜேஷ் ராஜா, வழக்குரைஞா் முத்துலட்சுமி, மாவட்ட துணைத் தலைவா்கள் பாலகிருஷ்ணன், முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரம நிா்வாகி ஸ்ரீ அம்பா ஆனந்தா ஆசி வழங்கினாா்.

இதில் விவசாய அணி தலைவா் நாகராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தென்காசி தெற்கு ஒன்றிய துணைத் தலைவா் திருமுருகன் வரவேற்றாா். ஒன்றிய பாா்வையாளா் செந்தூா் பாண்டியன் நன்றி கூறினாா்.

மேலகரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவேகானந்தரின் படத்திற்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினா் மகேஷ்வரன் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஊரக வளா்ச்சி பிரிவுத் தலைவா் சிவகுமாா், செல்லத்துரை, குடியிருப்பு சுப்புராஜ், இந்து முன்னணி மாவட்டச் செயலா் சிவா, மாவட்ட செயற்குழு உறுப்பினா் இசக்கிமுத்து, தென்காசி நகரத் தலைவா் நாராயணன், அலெக்ஸ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments