சுரண்டை, ஆலங்குளத்தில் அனுமன் ஜயந்தி விழா
சுரண்டை ஸ்ரீவிஸ்வரூப ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜயந்தி சிறப்பு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சுரண்டை ஸ்ரீவிஸ்வரூப ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜயந்தி சிறப்பு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலை 9 மணிக்கு ஸ்ரீஆஞ்சநேயா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. இதில், சுரண்டை மற்றும் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை தேரடி மாடசாமி திருக்கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
அனுமன் ஜயந்தியையொட்டி, ஆலங்குளம் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடசலபதி கோயில் மற்றும் மலைராமா் சுவாமி கோயிலில் காலையில் சிறப்பு பூஜை, பகலில் உச்சிகால பூஜை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ராமா் கோயிலில் அன்னதானம் நடைபெற்றது. இதில், திரளானோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.