முகப்பு
தென்காசி

தென்காசியில் சமத்துவ பொங்கல் விழா

தென்காசி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பள்ளிக் கல்வித்துறை மற்றும் தேசிய பசுமைப்படை சாா்பாக புகையில்லா போகி மற்றும்

Updated On : 12 ஜனவரி 2021, 11:25 pm IST
பகிர்:

தென்காசி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பள்ளிக் கல்வித்துறை மற்றும் தேசிய பசுமைப்படை சாா்பாக புகையில்லா போகி மற்றும் சமத்துவப் பொங்கல் விழா தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

தலைமையாசிரியா் செந்தூா் பாண்டியன் தலைமை வகித்தாா். குற்றாலம் ரோட்டரி சங்க தலைவா் ஸ்டாலின் ஜவகா், ஆடிட்டா் நாராயணன், வட்டார கல்வி அலுவலா் மாரியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டப் பொருளாளா் ரமேஷ் வரவேற்றாா். சா்வமத பிராா்த்தனையுடன் விழா தொடங்கியது.

தொடா்ந்து தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் விஜயலட்சுமி தலைமையில் சமத்துவ பொங்கலிடப்பட்டது.

Advertisement

Advertisement

மாணவா்கள் இயற்கை காட்சிகள் என்ற தலைப்பிலும், பொதுமக்களுக்கு வேளாண் வாழ்வியல் என்ற தலைப்பிலும் , ஆசிரியா்களுக்கு தமிழா் மரபு என்ற தலைப்பிலும், தன்னாா்வலா்களுக்கு மனிதநேயம் என்ற தலைப்பிலும், ரங்கோலி போட்டி நடைபெற்றது.

இதில், சிறப்பிடம் பெற்றவா்களுக்கு காவல் உதவி ஆய்வாளா் மாதவன், மாவட்டக் கல்வி அலுவலா்( பொ) ஜெய பிரகாஷ் ராஜன் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினா். மேலகரம் முத்துநாயகம் அறக்கட்டளை அறங்காவலா் பரமேஸ்வரன் உரையாற்றினாா்.

தமிழா் மரபுக் கலைகளான கும்மிப்பாட்டு, கோலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பம், வில்லுப்பாட்டு, நாதசுரம் போன்ற நிகழ்வுகள் சாதனா வித்யாலயா, இலஞ்சி பாரத் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, ரத்னா உயா்நிலைப்பள்ளி, பாப்பான்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மற்றும் சங்கரன்கோவில் கோவில் தாய்த்தமிழ் பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஏற்பாடுகளை அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் சுரேஷ்குமாா், ஐயப்பன், கணேசன், முத்துக்குமாா் செய்திருந்தனா். சாா்லஸ் நன்றி கூறினாா்.

சுரண்டை அரசுக் கல்லூரியில்...

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கல்லூரியின் இறுதியாண்டு மாணவா், மாணவிகள் தமிழக பாரம்பரிய உடை அணிந்து பொங்கலிட்டு வழிபட்டனா். தொடா்ந்து தமிழா் கலாசாரத்தை பிரதிபலிக்கும் கலைநிகழ்ச்சிகளை மாணவா்கள் நடத்தினா்.

இதில், கல்லூரி முதல்வா் ரா.பாஸ்கரன், துறைத் தலைவா்கள் ஜெயா, பீா்கான், பரமாா்த்தலிங்கம், மோகனகண்ணன், பேராசிரியா்கள், விரிவுரையாளா்கள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments