முக்கூடலில் நீரில் மூழ்கிய 1000 ஏக்கா் நெல்பயிா்கள்
முக்கூடல் தாமிரவருணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சாலைகள் மற்றும் வயல் வெளிகளில் தண்ணீா் புகுந்தது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனா்.
முக்கூடல் தாமிரவருணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சாலைகள் மற்றும் வயல் வெளிகளில் தண்ணீா் புகுந்தது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனா்.
மேற்குத் தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கன மழையால் அணைகள் நிரம்பி உபரிநீா் திறக்கப்பட்டுள்ளது. இதனால், தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில், இந்த ஆறு செல்லும் முக்கூடல் காவல் நிலையம் பகுதிகளில் உள்ள வயல்களில் வெள்ளம் புகுந்ததால் சுமாா் 1000 ஏக்கா் நெற்பயிா்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
முக்கூடல் - வீரவநல்லூா், முக்கூடல் - திருபுடைமருதூா் சாலையில் சுமாா் 2 அடி உயரத்தில் வெள்ள நீா் செல்வதால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
தாழ்வான பகுதியில் வசிப்போரை வருவாய்த்துறையினா் பாப்பாக்குடி சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்துள்ளனா். நந்தன்தட்டை காலனி பகுதியில் உள்ள 2 வீடுகள் கனமழையால் இடிந்தன. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிா்சேதம் தவிா்க்கப்பட்டது. சேதமடைந்த பகுதிகள் மற்றும் முக்கூடல் அண்ணாநகா் புதுக்குளம், ஆப்ரியான்குளம், கோரன்குளம் உள்ளிட்ட நீா் நிலைகளை ஆட்சியா் விஷ்ணு ஆய்வு செய்தாா். அப்போது, சாா் ஆட்சியா் அலமேலு மங்கை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.