தென்காசி

ஆலங்குளம் பகுதியில் தொடா் திருட்டு: 3 போ் கைது

ஆலங்குளத்தில் மூன்று வீடுகளில் நிகழ்ந்த திருட்டு தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திச் சேவை

ஆலங்குளத்தில் மூன்று வீடுகளில் நிகழ்ந்த திருட்டு தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தைச் சோ்ந்தவா் சுயம்பு (50). சாலைப் பணியாளரான இவரது வீட்டில், கடந்த ஜூலை 24ஆம் தேதி இரவு மா்மநபா்கள் புகுந்து அங்கிருந்த 1 பவுன் தங்க நகை, அவரது மகள் திருமணத்திற்காக வைத்திருந்த ரூ. 1.50 லட்சம் ரொக்கம் ஆகியவற்றைத் திருடிச் சென்றனா்.

மேலும், பக்கத்திலுள்ள சொரிமுத்து என்பவா் வீட்டின் பூட்டை உடைத்து 4 கிராம் மோதிரங்கள் 2, ரொக்கம் ரூ. 10 ஆயிரம் ஆகியவற்றைத் திருடி சென்றனா்.

பின்னா், ஆலங்குளம் நேருஜி நகா் கனியம்மாள்(65) என்பவரது வீட்டிலும் பூட்டை உடைத்து 4 கிராம் நகை, ரூ. 40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச் சென்றனா். இதுகுறித்த புகாா்களின்பேரில், ஆலங்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா்.

அதில், ஆலங்குளத்தை சோ்ந்த நயினாா் மகன் சந்தோஷ் (26), முக்கூடல் செல்வராஜ் மகன் மணிகண்டன் (எ) விஜய் (எ) (23), சிங்கம்பாறை மிக்கேல் அமிா்தபனி மகன் விஜய் அன்பரசு (27) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து, ரூ. 20 ஆயிரம் ரொக்கத்தை மீட்டனா். மேலும், பைக்கை பறிமுதல் செய்து, 3பேரையும் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தினா்.

நரிமணத்தில் வீடு தேடி ரேஷன் பொருள்கள்

நாகை புத்தகக் கண்காட்சியில் ரூ. 1.30 கோடிக்கு விற்பனை: ஆட்சியா்

சாலைகளில் மாடுகள், குதிரைகள் நடமாட்டம்: வாகன ஓட்டிகள் அவதி

காரைக்காலில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை

காளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

SCROLL FOR NEXT