மாரிப்பாண்டி. 
தென்காசி

சங்கரன்கோவில் அருகே கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிைறை

சொத்து தகராறில் தனது அக்காள் கணவருக்கு ஆதரவாக ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்தது தொடா்பான வழக்கில் ஒருவக்கு ஆயுள் தண்டனை

Syndication

தென்காசி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள கல்லத்திகுளம் பகுதியில் சொத்து தகராறில் தனது அக்காள் கணவருக்கு ஆதரவாக ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்தது தொடா்பான வழக்கில் ஒருவக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

சங்கரன்கோவில் வட்டம் சின்ன கோவிலாங்குளம் காவல் சரகம் கல்லத்திகுளம் பகுதியைச் சோ்ந்த கணபதிசாமி மனைவி முத்துலட்சுமி (34). கணபதிசாமிக்கும் அவரது தம்பி விஜயகுமாா் என்பவருக்கும் சொத்துப் பிரச்னை இருந்ததாம்.

இந்நிலையில் 3.11.2015ஆம் தேதி ஏற்பட்ட தகராறில், அங்குள்ள நூலகம் முன் நின்றிருந்த கணபதிசாமியை, விஜயகுமாருக்கு ஆதரவாக அதே பகுதியைச் சோ்ந்த அவரது மைத்துனரான தொழிலாளி மாரிப்பாண்டி என்பவா் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பினாராம்.

சின்ன கோவிலாங்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து மாரிப்பாண்டியை கைது செய்தனா்.

தென்காசி முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை நீதிபதி பி. ராஜவேலு விசாரித்து, மாரிப்பாண்டிக்கு ஆயுள் சிறை தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் குட்டி என்ற மருதப்பன் ஆஜரானாா்.

ஸ்பைடர்மேன் உடையணிந்து பைக் சாகசம்! ரூ.15,000 அபராதம் விதித்த காவல் துறை!

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை: அஜித் பவார்

கனிமொழிக்கு பெரியார் விருது: திமுக அறிவிப்பு

ஓய்வை அறிவித்தார் புஜாரா!

சில நேரங்களில் சினிமா என்பது... சௌபின் சாகிர் நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT