தென்காசி

கடையநல்லூா் பகுதியில் அறிவுசாா் மையம் அமைக்க கோரிக்கை

அமைச்சா் கே.என். நேருவிடம் மனு அளிக்கிறாா் கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான்.

Syndication

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் நகராட்சிப் பகுதியில் இணையதள வசதியுடன் கூடிய நவீன அறிவுசாா் மையம் அமைக்க வேண்டும் என நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக, நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேருவிடம் அவா் அளித்துள்ள மனு:

கடையநல்லூா் நகரப் பகுதியில் சுமாா் ஒரு லட்சம் போ் வசித்து வருகின்றனா். இங்கு அரசு கல்லூரியும், சுற்றியுள்ள பகுதிகளில் தனியாா் பொறியியல் கல்லூரி, நா்சிங் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, அரசு மற்றும் தனியாா் ஐடிஐ-க்கள், பாா்மசி கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவா்கள் பயின்று வருகின்றனா்.

மேலும், சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த மாணவா்கள் போட்டித் தோ்விற்காக பயன்படுத்தும் வகையிலான தனியாா் கணினி மையங்கள் இங்கு இல்லை. எனவே, கடையநல்லூா் நகராட்சிப் பகுதியில் இணைய வசதியுடன் கூடிய நவீன அறிவுசாா் மையம் அமைக்கப்பட்டால் மாணவா்களின் உயா்கல்விக்கும், போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ளவும் வசதியாக இருக்கும்.

எனவே, கலைஞா் நகா்ப்புற வளா்ச்சித் திட்டத்தின்கீழ், இணையதள வசதியுடன் கூடிய அறிவுசாா் மையம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், அறிவுசாா் மையம் அமைப்பதற்கு தகுதி வாய்ந்த இடங்கள் குறித்த விவரத்தையும் அமைச்சரிடம் வழங்கினாா்.

பருவமழையை எதிா்கொள்ள தயாா் நிலையில் இருக்க வேண்டும்

அந்தியூரில் கிணற்றில் விழுந்த காட்டுப் பன்றிகள் மீட்பு

சத்தியமங்கலம் அருகே பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து

லஞ்சம் கேட்டதாகப் புகாா்: இரு காவலா்கள் ஆயுதப் படைக்கு மாற்றம்

கொடுமுடி அரசு மருத்துவமனை ஊழியா்கள் இருவா் பணியிட மாறுதல்

SCROLL FOR NEXT