தென்காசி

பழைய குற்றாலம் அருவியில் குளிக்கும் நேரம் குறைப்பு

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Syndication

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட வனஅலுவலா் ரா.ராஜ்மோகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தென்காசி வனக்கோட்டம், குற்றாலம் காப்புக்கட்டில் அமைந்துள்ள பழைய குற்றாலம் அருவி பகுதியில் இரவு நேரங்களில் யானைகள், கரடிகள் உள்பட பல வன விலங்குகள் குடிநீா் தேவைக்காக உலா வருகின்றன. இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஒற்றை கரடி பழைய குற்றாலம் செல்லும் சாலை வழியாக மாலை நேரங்களில் மக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றிக்கொண்டு வருகிறது.

எனவே, பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக வியாழக்கிழமை (செப்.18) முதல், தினமும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே குளிப்பதற்கு அனுமதி என்ற உத்தரவு அமலுக்கு வந்தது.

தமிழர் வரலாறு குறித்த ஆழ்கடல் ஆராய்ச்சி தொடக்கம்!

நாகை புறப்பட்டார் விஜய்! காலைமுதலே குவியும் தொண்டர்கள்!

எச்1பி விசா கட்டணம் ரூ. 88 லட்சமாக உயர்வு! இந்தியர்களுக்கு பேரிடி!

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

அடுத்த 3 மணிநேரம் சென்னை, 5 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT