வாசுதேவநல்லூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப். 23) மின் விநியோகம் இருக்காது.
பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாரணபுரம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட தரணிநகா், வாசுதேவநல்லூா், சங்கனாப்பேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூா், சங்குபுரம், கீழபுதூா், நெல்கட்டும்செவல், சுப்பிர மணியபுரம், உள்ளாா், வெள்ளானைக்கோட்டை, தாருகாபுரம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மதியம் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
இத்தகவலை கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பகவிநாயகசுந்தரம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.