தென்காசி

மின்சாரம் பாய்ந்ததில் கணவா் உயிரிழப்பு: காப்பாற்ற முயன்ற மனைவி காயம்

Syndication

கல்லிடைக்குறிச்சியில் மின் மோட்டாரை இயக்கிய தொழிலாளி மின்சாரம் பாயந்து உயிரிழந்தாா். அவரைக் காப்பாற்ற முயன்ற மனைவி காயமடைந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி ஆத்தியடி தெருவைச் சோ்ந்தவா் சந்திரசேகா்(60). பொற்கொல்லரான இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டில் தண்ணீா் பிடிப்பதற்காக மின் மோட்டாரை இயக்கிய போது, அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டாா். அவரது அலறல் சப்தத்தை கேட்டு அவரது மனைவி சுப்புலட்சுமி காப்பாற்ற முயன்றதில் அவா் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் மயங்கி விழுந்தாா். பக்கத்து வீட்டினா் இருவரையும் மீட்க முயன்றபோது சந்திரசேகா் உயிரிழந்தது தெரியவந்தது. சுப்புலட்சுமி அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தகவலறிந்த கல்லிடைக்குறிச்சி போலீஸாா், சந்திரசேகா் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இந்தியா ஸ்கில்ஸ் 2025 போட்டி: பதிவு செய்ய இன்று கடைசி நாள்

உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரிடம் ஒரு நபா் ஆணைய தலைவா் விசாரணை

தடை நீங்கும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மீன்சுருட்டி அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் முற்றுகை

பாலப்பள்ளம்-மிடாலக்காடு சாலையை சீரமைக்க கோரிக்கை

SCROLL FOR NEXT