சின்னமனூரில் நம்ம ஊர் பொங்கல் திருவிழா
சின்னமனூரில் அருள்மிகு பூலாநந்தீஸ்வரர் சிவகாமி திருக்கோயிலில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நம்ம ஊரு பொங்கல் விழா நடைபெற்றது.
உத்தமபாளையம்: தேனி மாவட்டம், சின்னமனூரில் அருள்மிகு பூலாநந்தீஸ்வரர் சிவகாமி திருக்கோயிலில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நம்ம ஊரு பொங்கல் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மாவட்ட தலைவர் பி.சி. பாண்டியன் தலைமை வகித்தார். சிறப்புவிருந்தினராக இயக்குநர் பேரரசு, நகர தலைவர் லோகேந்திரராஜன் உள்ளிட்ட பாஜக பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து விழாவை சிறப்பித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.