பென்னிகுவிக் பிறந்த நாள்: ஜன.14 இல் கூடலூரில் மாரத்தான், சைக்கிள் பந்தயம்
முல்லைப்பெரியாறு அணையைக் கட்டியபென்னிகுவிக் பிறந்த நாளை முன்னிட்டு கூடலூரில் வரும் 14 ஆம் தேதி மாரத்தான் ஓட்டம் மற்றும் சைக்கிள் பந்தயம் நடைபெறுகிறது.
முல்லைப்பெரியாறு அணையைக் கட்டியபென்னிகுவிக் பிறந்த நாளை முன்னிட்டு கூடலூரில் வரும் 14 ஆம் தேதி மாரத்தான் ஓட்டம் மற்றும் சைக்கிள் பந்தயம் நடைபெறுகிறது.
கூடலூா் மக்கள் மன்றம் சாா்பில் நடைபெறும் இப்போட்டியில் வென்றவா்களுக்கு முதல் பரிசு ரூ. 3,000, இரண்டாம் பரிசு 2,000, மூன்றாம் பரிசு 1,000, ஆறுதல் பரிசு 750 என வழங்கப்படும். வெற்றிபெறும் வீரா்களுக்கு அமரா் ஆா்.பி. அசோகன் நினைவு கோப்பை வழங்கப்பட இருக்கிறது. மாரத்தான் போட்டியில் கலந்து கொள்வதற்கு ரூ. 25, சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொள்வதற்கு ரூ. 50 முன்கட்டணம் செலுத்தி, ஜனவரி 13 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்ய வேண்டிய இடம் கூடலூா் மக்கள் மன்ற அலுவலகம் மற்றும் பஜாா் பகுதியிலுள்ள ஸ்ரீ டிராவல்ஸ் அலுவலகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.