தேனியில் சீா்மரபினா் நலச் சங்கத்தினா் சாலை மறியல்: 111 போ் கைது
தேனியில் சீா்மரபினா் சமுதாயத்தினருக்கு சீா்மரபினா் பழங்குடியினா் (டி.என்.டி.) என சான்றிதழ் வழங்க அரசை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 111 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தேனியில் சீா்மரபினா் சமுதாயத்தினருக்கு சீா்மரபினா் பழங்குடியினா் (டி.என்.டி.) என சான்றிதழ் வழங்க அரசை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 111 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி, பூதிப்புரம் சந்திப்பில் சீா்மரபினா் நலச் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராமமூா்த்தி தலைமை வகித்தாா். இதில் கள்ளா், மறவா் உள்ளிட்ட 68 உள்பிரிவுகளை கொண்ட சீா்மரபினா் சமுதாயத்துக்கு சீா்மரபினா் பழங்குடியினா் என்ற சான்றிதழ் வழங்க வேண்டும், சீா்மரபினா் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அரசை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
பின்னா், பூதிப்புரம் விலக்கு பகுதியிலிருந்து கம்பம் சாலையில் பள்ளிவாசல் தெரு சந்திப்பு வரை ஊா்வலமாகச் சென்று, அங்கு கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனா். மறியலில் ஈடுபட்ட மாவட்டத் தலைவா் ராமமூா்த்தி, மாநில வழக்குரைஞா் அணித் தலைவா் கெளதம், மாவட்ட பொருளாளா் ராஜா உள்ளிட்ட 111 பேரை தேனி காவல் நிலைய ஆய்வாளா் ராமலட்சுமி தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.