நெல்லை மாநகரில் சாரல் மழை
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் வியாழக்கிழமை காலை முதல் வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன் லேசான சாரல் மழை பெய்தது.
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் வியாழக்கிழமை காலை முதல் வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன் லேசான சாரல் மழை பெய்தது.
வடகிழக்குப் பருவ மழை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் தமிழக பகுதிகளில் மேலும் சில நாள்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியிலும் மிதமான மழை பெய்து வருகிறது.
திருநெல்வேலி மாநகரில் வியாழக்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பாளையங்கோட்டை, மேலப்பாளையம், திருநெல்வேலி நகரம், கொண்டாநகரம், அபிஷேகப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகலுக்கு பின்பு விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இதனால் குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.